Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான விசா: விண்ணப்பிப்பது எப்படி?
25/11/2025 Duration: 10minஇந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் MATES - Mobility Arrangement for Talented Early professionals Schemeஇன் அடுத்த கட்டம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 25 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
25/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
விமானப் பயணத்தில் பவர் பேங்க் பயன்படுத்த தடை வருகிறது
24/11/2025 Duration: 03minவிமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் குரலில் அவரது கவிதை!
24/11/2025 Duration: 03minதமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். "பாரதியாருக்குப்பின் யாருடைய கவிதைகளையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழன்பன் போன்றோர் நல்ல கவிதைகளைப் படைக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கவிதை வளர்ந்துகொண்டுதான் உள்ளது, நாம்தான் இத்தனை காலம் அவற்றை படிக்காமல் விட்டுவிட்டோம் என்று கவலைப்பட்டேன்" என்று தமிழின் மூத்த இலக்கியவாதி ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக கவிதை உலகில் தனி முத்திரை பதித்த ஈரோடு தமிழன்பன் அவர்களது கவிதைகளில் ஒன்றை அவரது குரலியே செவிமடுப்போம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கிய நேர்முகம்!
24/11/2025 Duration: 20minதமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ எனும் கவிதை நூலுக்காக 2004ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோது SBS தமிழ் அவரை நேர்கண்டிருந்தது. அந்த நேர்முகத்தின் மறுபதிவு இது. அவரோடு உரையாடியவர் றைசல்.
-
-
செய்தியின் பின்னணி : சிங்கப்பூரின் புதிய SAF வரி விமான கட்டணத்தை உயர்த்துமா?
24/11/2025 Duration: 07minசிங்கப்பூர் அரசு உலகில் முதன்முறையாக ‘Sustainable Aviation Fuel Levy’ SAF என்ற புதிய வரியை அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் இருவரும் கரியமில உமிழ்வு இல்லாத பசுமையான விமான எரிபொருளின் செலவை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த SAF வரி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
24/11/2025 Duration: 09minஇந்தியா முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் அமல்; தமிழக சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை!; காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ”மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இன்றைய செய்திகள்: 24 நவம்பர் 2025 - திங்கட்கிழமை
24/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
22/11/2025 Duration: 08minநாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (16 – 22 நவம்பர் 2025)
21/11/2025 Duration: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (16 – 22 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
-
‘Everyone wants to matter’: How we can prevent hate and division in our neighbourhoods - அயலவர்களுடன் வெறுப்பும் பாகுபாடும் உருவாகாமல் தடுக்க என்ன செய்யலாம்?
21/11/2025 Duration: 06minOur social cohesion is under threat. But building stronger community ties can help grow connection, trust and shared belonging. - நமது சமூக ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் வலுவான சமூக இணைப்புகளை உருவாக்குவது தொடர்பு, நம்பிக்கை மற்றும் பகிரும் உணர்வை வளர்க்க உதவும்.
-
செய்தியின் பின்னணி: ஆஷஸ், காலத்தை கடந்து நிற்கும் கிரிக்கெட்டின் மரபுக் கதை
21/11/2025 Duration: 08min“ஆஷஸ் (The Ashes)” என்பது கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் நடைபெறும் இப்போட்டியின் 74வது தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
‘தமிழர் தேசிய இனம் என்பதை ஏற்காதவர்களோடு இணைந்து செயல்பட நான் தயாரில்லை’ - மாத்தளை சோமு
21/11/2025 Duration: 08minமாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 3
-
இன்றைய செய்திகள்: 21 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
21/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
‘விருது தந்தால் வாங்குவேன்; விருதைத்தேடி போவதில்லை’ - மாத்தளை சோமு
21/11/2025 Duration: 13minமாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
20/11/2025 Duration: 08minஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிபர் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு மற்றும் வடக்கு , கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் ஆதரவளிப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளுந்தரப்பு மறுப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி”நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
20/11/2025 Duration: 08minஉக்ரைனில் போர் நிறுத்தம்? அமெரிக்கா, ரஷ்யாவின் புதிய திட்டம்; காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; சூடானில் உள்நாட்டு யுத்தம்: முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் அறிவிப்பு; பிரேசிலில் COP30 மாநாடு; DR காங்கோவில் சுரங்க விபத்து: 32 பேர் பலி; நைஜீரியாவில் 25 பெண் குழந்தைகள் கடத்தல்; ஆப்பிரிக்காவில் மோசமான பாதுகாப்பு சூழ்நிலை: ஐ.நா. எச்சரிக்கை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
‘வரலாறு தெரியாத சமூகமாக தமிழ் மக்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ – மாத்தளை சோமு
20/11/2025 Duration: 15minமாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1
-
நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா?
20/11/2025 Duration: 14minஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.